வள்ளிநாயகபுரத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

வள்ளிநாயகபுரத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்.

வள்ளிநாயகபுரத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்        

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வள்ளிநாயகபுரம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் 13வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் டிச.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வள்ளிநாயகபுரம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தாழபுஷ்பம் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் தடிகராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.

கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் வார்டு உறுப்பினர் பார்வதி மக்கள் நலப்பணியாளர் முனியசாமி,கிராம வள பயிற்றுநர்கள் முத்து முனிஸ்வரி, அன்னலட்சுமி, மாலதி, கோகிலா, கணினி உதவியாளர் கவிதா,பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பணித்தள பொறுப்பாளர் பாண்டிலட்சுமி நன்றி கூறினார்.இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் சில்லா நத்தம், புதூர் பாண்டியாபுரம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad