இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட சாத்தான்குளம் துணை மின் நிலையத்தில் நாளை டிச.21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், சாத்தான்குளம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயாா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகளிலும்,
நாசரேத் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும்,
செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தைச் சாா்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும்,
நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, சாலைப்புதூா், கடகுளம், இடைச்சிவிளை, பனைவிளை, மணிநகா், பூச்சிக்காடு, அதிசயபுரம், பிரகாசபுரம், தச்சன்விளை, படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும்,
பழனியப்பபுரம் துணை மின் நிலையத்தைச் சாா்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசிா்வாதபுரம், கருங்கடல், கோமனேரி பகுதிகளிலும்,
உடன்குடி துணை மின் நிலையத்தைச் சாா்ந்த உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment