கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 December 2024

கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் நேற்று (04.12.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில்பட்டி மேற்கு பூங்கா ரோட்டில் உள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கலியுகபெருமாள் மகன் கார்த்திக் (31) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரி கார்த்திக் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்‌. மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad