சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விளக்க கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 October 2024

சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விளக்க கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (அக்டோபர் - 17) போதைப்பொருள் தடுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விளக்க கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்ட கலால் துறை அலுவலர் தங்கையா, தனி வருவாய் ஆய்வாளர் முத்துராமன், கிராம நிர்வாக அலுவலர் விஜய மூர்த்தி, கிராம நிர்வாக உதவியாளர் சோமசுந்தரம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர்கள், நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றி கலால் துறை அலுவலர் மாணவர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர். 

மேலும் பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, அரசுத்துறைகளிலிருந்து தமக்குத் தேவையான தகவல் பெறுவது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும், மாணவர்களுடன் இணைந்து போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad