கயத்தார் - "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 October 2024

கயத்தார் - "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கோரிக்கை மனுக்களை அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் தகவல்.

தமிழக முதல்வர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கயத்தார் வட்டத்தில் 23.10.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார்.  

இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 04.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை கயத்தார் குறுவட்டத்தில் கயத்தார் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கட்டிடத்திலும், காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில், காமநாயக்கன்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திலும், கடம்பூர் குறுவட்டத்தில் கடம்பூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், செட்டிகுறிச்சி குறுவட்டத்தில் பொன்னுசாமி திருமண மண்டபத்திலும் பெற உள்ளனர்.  

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்., கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad