மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 அன்று அனைத்து வகையான மதுபானக் கடைகள்
மூடப்பட்டிருக்க வேண்டும் மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், மிலாடி நபியை முன்னிட்டு 17.09.2024 அன்று
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-ன் படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த
மதுபானக் கூடங்கள் மற்றும் FL2, FL3 உரிமதலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க
வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள்
கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment