டாஸ்மாக் பாரில் மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 26 September 2024

டாஸ்மாக் பாரில் மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 பேர் கைது.

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுபட்டு இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவர் 2ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த மட்டக்கடையைச் சேர்ந்த ஜான் (26), முனியசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ராமலட்சுமணன் (29), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்தனராஜ் (24) ஆகிய 3 பேரும் பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் பிரகாஷை மது பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து ஜான், ராமலட்சுமணன், சந்தனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad