வரன்முறை இசைவு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட (HACA) பகுதியில் அமையும் பட்சத்தில் அரசுக் கடிதம் எண். 15535/நவ4(3)/2019, நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
#தூத்துக்குடி மாவட்டம்
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment