01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறை பெற 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 14 August 2024

01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறை பெற 31.01.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.



தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.14, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறை, அரசாணை எண்.76 நாள் 14.06.2018-ல் எவ்வித மாற்றமின்றி திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையின் மூலமாக வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும், 


வரன்முறை இசைவு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட (HACA) பகுதியில் அமையும் பட்சத்தில் அரசுக் கடிதம் எண். 15535/நவ4(3)/2019, நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


#தூத்துக்குடி மாவட்டம்


தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad