நாசரேத், ஆகஸ்ட்.24, திருமுறையூர், வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். சங்கீதம் 18:34 எனும் வேத வாக்கியத்தை முன்னிறுத்தி TNPSC/TNUSRB / TRB ஆகிய அரசு தேர்வுகளுக்கு மாணவ மாணவியர்களை தயார் படுத்தும் நோக்கில், இலவச அடிப்படை வகுப்புகள் (Fundamental Course) வருகின்ற 07.09.2024 அன்று மதியம் 3.00 மணி முதல் நடைபெற உள்ளது.
இதனை நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபைமன்ற தலைவர் Rev.Dr.P. வெல்ற்றன் ஜோசப் தலைமையில், சென்னையை சேர்ந்த DSP, C.A.S.J. ஜான் கென்னடி, திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சார்ந்த ஆ.கனிஷ்டன், வ. அரவிந்த் ஆகியோர் அரசு தேர்வுக்கு வழிகாட்டும் இலவச அறிமுக வகுப்புகளை தொடங்கி வைக்கிறார்கள்.
இடம்: மறுரூப ஆலயம் திருமறையூர்
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, தேர்வுக்கான பாடத்திட்டம்: பொதுத்தமிழ் / பொதுஅறிவு / திறனறிவு. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கல்லூரி படிப்பவர்கள் மற்றும் டிகிரி (Any Degree) முடித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அரசுப் பணி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என கூறியுள்ளனர்.
மேலும் சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் அரசுப் பணிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் வகுப்புகள் நடத்தப்படும். நாசரேத் சுற்று வட்டார மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள தொடர்புக்கு
Rev. H.ஜான் சாமுவேல் 94 884 00 874
திரு. C. சுதாகர் 9442 72 3412.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment