உடன்குடி - அத்தியடிதட்டு ஒடகரை சுடலை மாடசுவாமி கோவில் ஆவணி திருவிழா - ஏராளமானோர் பங்கேற்று தரிசனம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

உடன்குடி - அத்தியடிதட்டு ஒடகரை சுடலை மாடசுவாமி கோவில் ஆவணி திருவிழா - ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்.

தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.22, உடன்குடி அருகே அத்தியடிதட்டு கிராமத்தில் உள்ள ஓடகரை சுடலை மாட சுவாமி திருக்கோவில் ஆவணி கொடை விழா கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்தது. 

விழாவையொட்டி நேற்று சுவாமி வீதி உலா வந்து இரவு 12 மணிக்கு சுவாமி விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் பட்டுத்துரை நாடார் தலைமையில் செய்திருந்தனர். விழாவில் ராமச்சந்திர நாடார், முருகவேல் நாடார், கோவில் பூசாரி லிங்கேஸ்வரன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா உணவு எடுப்பதுடன் நிறைவடைகிறது.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad