ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தின்96 வது ஆண்டு விழாவில் 2ம் நாள் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆராதனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தின்96 வது ஆண்டு விழாவில் 2ம் நாள் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆராதனை.

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தின் 96வது ஆண்டு பெருவிழா புதன் கிழமை  மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

2ம் நாள் விழாவான நேற்று  காலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, மதியம் 11:30 மணிக்கு திருயாத்திரை திருப்பலி2 நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஜெபமாலை, மறையுரை,  மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. 

தூத்துக்குடி நற்செய்தி நடுவம் இயக்குனர் ஜோசப் இசிதோர் மறையுரை நிகழ்த்தினார். 
இதில்  திருத்தல அதிபர்    சில்வஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதிக்குழுவினர், சபை மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad