திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.... இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்பு... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.... இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்பு...

 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.... இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்பு...


அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் வாழ்த்து.... முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அறநிலையத்துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த கார்த்திக் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ். ஞானசேகரன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன்,இடம் மாறிசெல்லும் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் நகர மன்ற தலைவர் சிவ ஆனந்தி மற்றும் கவுன்சிலர்கள்,  அறநிலைய துறை  அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய இணை ஆணையருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad