குலசேகரன்பட்டினம் அருகே வடக்கூரில் உள்ள....... பரி. யோவான் ஸ்நானகர் ஆலய 135வது பிரதிஷ்டை, அசன பண்டிகை... திரளான மக்கள் பங்கேற்பு...
தூத்துக்குடி -நாசரேத் சிஎஸ்ஐ திரு மண்டலம் குலசேகரன்பட்டினம் சேகரம் வடக்கூரில் பரி. யோவான் ஸ்நானகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 235 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை சபையார் கலை நிகழ்ச்சிகள், வெள்ளிக்கிழமை பாலர் மன மகிழ்ச்சி பண்டிகை, பஜனை பிரசங்கம், சனிக்கிழமை வாலிபர் பண்டிகை, ஆவிக்குரிய உயிர் மீட்சி கூட்டம், ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் ஆராதனை, ஆண்கள் பண்டிகை நடந்தது. திங்கட்கிழமை வேதாகம தேர்வு, விளையாட்டுப் போட்டி, ஆயத்த ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அதிகாலை 2மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. நெல்லை திரு மண்டலம அழகிய பாண்டியபுரம் சேகரம் விக்டர் ஆரோக்கியராஜ் தேவசெய்தி வழங்கினார். பின்னர் 9 மணிக்கு அறுப்பின் பண்டிகை, மதியம் 12 மணிக்கு ஐக்கிய விருந்து நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் அசன விருந்து நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அருட் பணியாளர் ஜான்சன் சாது சுந்தர் சிங், சபை ஊழியர் சிலுவை மாணிக்கம் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment