பரமன்குறிச்சியில் உள்ள...ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளர் நல சங்க கூட்டம்... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

பரமன்குறிச்சியில் உள்ள...ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளர் நல சங்க கூட்டம்...


 பரமன்குறிச்சியில் உள்ள...ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளர் நல சங்க கூட்டம்...

ஒன்றிய குழு தலைவர் பாலசிங் பங்கேற்பு...

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளர் நல சங்க கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய குழு தலைவர் பாலசிங் தலைமை வைத்தார். பரமன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லங்காபதி, மருத்துவ அலுவலர் புவனேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர் பொன் சாந்தி, செவிலியர் ஜெய சாந்தி மற்றும் பஞ்சாயத்து அலுவலர் சுந்தர்  மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பரமக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு வார்டு மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கு தனி கட்டிடத்தை  அரசு கட்டித் தர வேண்டும், சுகாதார நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களுக்கு பதில் புதிதாக இரண்டு கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும், மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செவிலியர் ஜெய சாந்தி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர் புவனேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad