திருச்செந்தூர், ஆகஸ்ட்.20, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவனின் 62வது பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
வீர மகேந்திர கோட்டை அம்பேத்கர் திடலில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு எங்கள் திறமையை வெளிப்படுத்தினர். விழாவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் பாவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 262 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சங்கதமிழன் விழாவிற்கு தலைமை வைத்தார்.6வது வார்டு பொறுப்பாளர் சரவணன் வரவேற்பு பேசினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விசிக தேர்தல் பரப்புரை குழு உறுப்பினர் அகமது சாஹிபு, டாக்டர் வெற்றிவேல், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார்,மீனவரணி மாநில துணைச் செயலாளர் மங்கை சேகர்,மீனவரணி மாநில துணைச் செயலாளர் மங்கை சேகர் மற்றும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் 1062 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment