ஆவணி மாத பவுர்ணமி - திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் - ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் அன்னதானம் வழங்கினர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

ஆவணி மாத பவுர்ணமி - திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் - ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் அன்னதானம் வழங்கினர்.

திருச்செந்தூர், ஆகஸ்ட்.20, அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  
இவை தவிர விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் அண்மை காலமாக பவுர்ணமி தினத்தன்று இரவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கியும், அகல் விளக்கேற்றியும் வழிபட்டு செல்கின்றனர் . இவ்வாறு வழிப்பட்டு செல்வதால் துன்பங்கள் நீங்கி நினைத்த காரியம் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது. 

இந்நிலையில் ஆவணி மாத பௌர்ணமி தினமான திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இரவில் கடற்கரையில் தங்கினர். இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பவுர்ணமி வழிபாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பக்தர்களுக்கு டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.  இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கிய வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழர் குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad