தூத்துக்குடி, ஆகஸ்ட்.20, சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள், திமுக மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள் மேயர், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment