தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.19, தூத்துக்குடி புதுக்கோட்டை மற்றும் வாகைக்குளம் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (19.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிசிடிவி கண்காணிப்பு, நுழைவு கட்டுப்பாடு மற்றும் பயணிகள் சோதனை செய்யப்படும் விதம் குறித்து விமான நிலைய மேலாளர் ஜெயராம் மற்றும் விமான நிலைய கட்டுமான பிரிவு பொறுப்பாளர் காட்வின் ஆகியோர்களுடன் கலந்துரையாடி அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு பயணிகள் பாதுகாப்பு குறித்தும், விமான நிலைய பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது விமான நிலைய பாதுகாப்பு பணி காவல் ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர் கனகராஜன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment