தூத்துக்குடி மூழ்கும் அபாயம்.. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 August 2024

தூத்துக்குடி மூழ்கும் அபாயம்..

 


தூத்துக்குடி மூழ்கும் அபாயம்..


காலநிலை மாற்றம் காரணமாக இந்திய கடல் மட்டம் உயர்வு, இதனால் 2040 ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட’ அறிக்கையை ஆகஸ்ட். 1, வியாழக்கிழமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 2040 ஆவது ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியில் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம் (86.6 ச.கி.மீ.) வரையில் நீரில் மூழ்கும் என்றும், 2060 ஆவது ஆண்டில் 9.65 சதவிகிதம் (114.31 ச.கி.மீ.) ஆகவும், 2080 ஆவது ஆண்டில் 15.11 சதவிகிதம் (159.28 ச.கி.மீ.) ஆகவும், 2100 ஆவது ஆண்டில் 16.9 சதவிகிதம் (207.04 ச.கி.மீ.) ஆகவும் நீர்மூழ்கும் இந்தப் பரப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைப்படி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத் திடல், அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.

1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 செ.மீ. என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில்தான் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது.

அதிகரித்து வரும் நகரமயமாக்கல், கடற்கரையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் காரணமாக தாழ்வான கடலோர பகுதிகள் கடல் மட்ட உயர்வால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad