ஏரல் வட்டத்திற்குட்பட்ட குறுவட்டங்களில் 07.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் நடைபெற உள்ளது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 August 2024

ஏரல் வட்டத்திற்குட்பட்ட குறுவட்டங்களில் 07.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் நடைபெற உள்ளது


ஏரல் வட்டத்திற்குட்பட்ட குறுவட்டங்களில் 07.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் நடைபெற உள்ளது.


ஏரல், ஆகஸ்ட்.02,  தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஏரல் வட்டத்தில் 21.08.2024 அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார். 


இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய், மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 07.08.2024 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ஆறுமுகமங்கலம் குறுவட்டத்தில் கே.வி.கே நட்டார் திருமண மண்டபத்திலும், பெருங்குளம் குறுவட்டத்தில் நட்டாத்தி இ-சேவை மையத்திலும், ஆழ்வார்திருநகரி குறுவட்டத்தில் யாதவர் திருமண மண்டபம், ஆழ்வார்திருநகரிலும் பெற உள்ளனர். 

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad