திருமறையூரில் - கால்பந்தாட்ட போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 August 2024

திருமறையூரில் - கால்பந்தாட்ட போட்டி.

 


திருமறையூரில் - கால்பந்தாட்ட போட்டி.


திருமறையூர் மறுரூப ஆலயத்தின் 17 வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 35 வது ஆலய அசன பண்டிகையை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.


இப்போட்டிகள் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியின் புல் தரை மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் கோயில்ராஜ் கலந்து கொண்டனர்.


இப்போட்டியை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் கோயில் ராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். பாலிடெக்னிக் பர்சார் தனபால் முன்னிலை வகித்தார். நாசரேத் மற்றும் அதில் சுற்று வட்டாரத்தில் இருந்து 14 அணிகள் பங்கு பெற்றது. இறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ்  அணியினர் மற்றும் திருமறையூர் அணியினர் விளையாடினார்கள். இதில் திருமறையூர் அணியினர் முதலாவது இடத்தை பெற்றார்கள். வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகையை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் திருமறையூர் அணிக்கு  வழங்கினார். இரண்டாம் பரிசை திருமறையூர் சேகர  திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தேவ் நாசரேத் மர்காஷிஷ் அணிக்கு வழங்கினார். நடுவர்களாக ஆசிரியர் தனபால் விமல் சுதாகர் மற்றும் ஜேசு கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால் தேவ் சேகரச் செயலாளர் ஜான்சேகர்,  கமிட்டி உறுப்பினர் பிரவீன், ஆசன கமிட்டி தலைவர் பாக்கியராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில் ராஜ் பர்சார்  தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து  மக்கள் வந்து இப்போட்டியை கண்டு களித்தனர். இப்போடிகளுக்கான ஏற்பாடுகளை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் அவர்கள் முன்னிலையில் சேகர கமிட்டி மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனையின் பெயரில்  ராஜ்குமார் பிரவீன், ஆலன் ஜெரிமியா இணைந்து  செய்திருந்தார்



தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad