தூத்துக்குடி தெற்கு மாவட்ட... பனங்காட்டுப்படை கட்சி செயலாளராக தாமரை கண்ணன் நியமனம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

தூத்துக்குடி தெற்கு மாவட்ட... பனங்காட்டுப்படை கட்சி செயலாளராக தாமரை கண்ணன் நியமனம்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.24, பனங்காட்டு படை கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக தாமரை கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் அப்பதவிலிருந்து விடுவிக்கப்பட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வைத்து வந்த தாமரைக்கண்ணன் நாடார் அப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து தாமரைக்கண்ணன் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக பதவியேற்கும் தாமரை கண்ணனுக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக 

MT.அந்தோணி ராஜா
.திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad