நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் சிவ ஆனந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் செங்குழி ஏ பி ரமேஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment