நாசரேத் - மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

நாசரேத் - மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு



ஆகஸ்ட் -26, நாசரேத் அருகே உள்ள மூக்குப்பேரி கிராமத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்து வந்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாசரேத் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நாசரேத் காவல் நிலைய துணை ஆய்வாளர் வைகுண்டாதாஸ், காவலர் தர்மலிங்கம் உடன் நாசரேத் நல்ல சமாரியன் மனநல காப்பக ஊழியர் காப்ரியேல் ஆகியோர், மேற்படி மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு காப்பகத்துக்கு கூட்டி வந்தனர்.

மேற்படி நபரை விசாரித்ததில் அவருடைய ஊர் மதுரை என்பதை தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad