தமிழ்நாடு, ஆகஸ்ட்.18, கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற தாம்பரம் இண்டர்லாகிங் & யார்டு பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று நண்பகல் முதல் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமான முறையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத்20665 தனது பயணத்தை முதல் ரயிலாக 02.51PM முதல் எழும்பூரில் இருந்து தொடங்கியது. அடுத்தடுத்த புறப்படும் ரயில் போக்குவரத்து வழக்கமான முறையில் எழும்பூரில் இருந்து இயங்கும்.
அதே போல சென்னை கடற்கரை - செங்கல்பட்டு சந்திப்பு - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவையும் ஞாயிறு பட்டியலின் அடிப்படையில் தனது வழக்கமான சேவையை தொடங்கியது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment