தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 August 2024

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு.

தூத்துக்குடி, நேற்று (17.08.2024) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு.

இந்த ஆய்வில் அங்கு பணியில் இருந்த  மருத்துவமனை ஊழியர்களிடம் மருத்துவமனை  பாதுகாப்பு பற்றி கேட்டறிந்தும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலைய காவலர்களிடம் வரும் தகவல்கள் உட்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும்  பணி செய்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

மேலும் அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி நபர்களிடம் அவர்களது செக்யூரிட்டி நிறுவனம் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு முறை பற்றியும் கேட்டறிந்து, எந்த பிரச்சனை இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் காவல்துறையின் கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்படுத்திடவும் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பாதுகாப்பை மேம்படுத்தவும் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களுக்கும் உத்தரவிட்டார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad