மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடி மருத்துவம்" - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடி மருத்துவம்"


 தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சுகாதார வட்டத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடி மருத்துவம்" திட்டத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட  ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்கக்கூடிய ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் என்ற உன்னதத்திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்  2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 தேதி அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்றையதினம் மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் இந்த திட்டம் மிக முக்கியமான திட்டம் என்று சொல்கிறோம் என்றால் நோய்களில் இருவகைகள் மிக முக்கியமானது. தொற்றக்கூடிய நோய், தொற்றா நோய். தொற்றக்கூடிய நோய்கள் கொசு மற்றும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் பரவக்கூடிய அதாவது டெங்கு, மலேரியா மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவதால் வரக்கூடிய நோய்கள். இதற்கு அறிகுறி காய்ச்சல். தொற்றா நோய்களில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் இந்த இரு நோய்களும் மனித உடல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய்களுக்கு அறிகுறிகள் எதுவும் இருக்காது.

இந்த  நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எதனால் இத்திட்டம் பொது மக்களுக்கு பயனுள்ள திட்டம் என்று கூறப்படுகிறது என்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கும் நோய்களின் தன்மைகளை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்வதாலும் இத்திட்டம் முக்கியமான திட்டமாக உள்ளது.

இதே போல் அனைத்து திங்கட்கிழமைகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வருகைதரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்; மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ பரிசோதனை செய்யும் முகாம் நடைபெறுகிறது.

மேலும், நகர்ப்புற பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதுபோன்று ஊரகப்பகுதிகளிக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் மக்கள் தொடர்பு முகாமிலும் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முகாம்கள் நடத்துவதற்கான நோக்கம் பொது மக்கள் உடல் நலத்தினை பேணிகாப்பதற்காகவும்  நோய்களின் தன்மை அறிவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் மிகக் முக்கியமான திட்டம் இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.

No comments:

Post a Comment

Post Top Ad