திருச்செந்தூர் - கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது - 210 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

திருச்செந்தூர் - கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது - 210 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

 


திருச்செந்தூர் - கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது - 210 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.


திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஷேக் அப்துல் காதர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் நேற்று (03.08.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது,


திருச்செந்தூர், வால்விளை  விலக்கு அருகே  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பாலகிருஷ்ணன் (19), தோப்பூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் மாயாண்டி (19) திருச்செந்தூர் நத்தகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துக்குமார் மகன் சூரிய நாராயணன் (21) மற்றும் இல்லாங்குடி என்பவர் மகன் சதீஷ்குமார் (25) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார், 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 210 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad