பரமன்குறிச்சி வடக்கு யாதவர் தெரு மாரியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா - குழந்தைகளுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் பரிசு வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

பரமன்குறிச்சி வடக்கு யாதவர் தெரு மாரியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா - குழந்தைகளுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் பரிசு வழங்கினார்.

ஆகஸ்ட்.27, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி வடக்கு யாதவர் தெருவில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத கொடை விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. 

விழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர். 

இதில் வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் தலைமையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஊர் பிரமுகர்கள் மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், முத்து, பால்பண்ணை மகாராஜன், பூவரசன், வேல்முருகன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad