வட்டார அளவிலான கபடி போட்டியில் நடு நாலுமூலைக்கிணறு உயர்நிலைப் பள்ளி அணி சாம்பியன் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலே பயிற்சி பெற்று அசத்தல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

வட்டார அளவிலான கபடி போட்டியில் நடு நாலுமூலைக்கிணறு உயர்நிலைப் பள்ளி அணி சாம்பியன் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலே பயிற்சி பெற்று அசத்தல்.

ஆகஸ்ட்.27, திருச்செந்தூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஆசீர்வாதபுரம் பள்ளியில் நடைபெற்றது. 

இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் 25 பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில் நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணியும், நடு நாலு மூலைக்கிணறு பள்ளி மாணவர்கள் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் நடுநாலுமூலைக் கிணறு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று வட்டார அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

வெற்றி பெற்ற நடுநாலுமூலைக் கிணறு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. விளையாட்டின் மீதான ஆர்வத்தில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமலேயே மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலும், நடுவை வவுனியா கபடி அணி வீரர்களின் தீவிர பயிற்சியாலும் மாணவர்கள் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 

பட்டம் வென்ற மாணவர்களை ஊர் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், வவுனியா கபடி அணி வீரர்கள் என பலரும் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad