ஆகஸ்ட்.27, திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தின் 96 வது ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 7 ம் திருவிழாவான இன்று (செவ்வாய்) காலை 6.10 மணிக்கு திரு யாத்திரை திருப்பலி1 நற்கருணை வீரர் சபையினர், திருக்குடும்ப உயர்நிலைப்பள்ளிகள் சார்பில் நாகலாபுரம் பங்குத்தந்தை அருட்பணி. ரினோ தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் திரு யாத்திரை திருப்பலி -2 நடைபெற்றது. கல்லாமொழி, குலசை, உடன்குடி, பிச்சிவிளை இறைமக்கள், புனித அந்தோணியார் அன்பிய மண்டலம் சார்பில் பேரருட் பென்சிகர் அடிகளார், அருட்பணி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
இதில் திருத்தல அதிபர் சில்வஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதிக்குழுவினர், சபை மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment