தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி பாண்டிமுத்து (28), இந்த தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனவேதனையடைந்த பாண்டிமுத்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment