செய்துங்கநல்லூர், ஆகஸ்ட்.12, செய்துங்கநல்லூரில் இயங்கி வரும் செயின்ட் சேவியர் தொழில்நுட்பக் கல்லூரியில், திருவைகுண்டம் தாசில்தார் லிங்ககுமார் தலைமையில் சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் இன்னோஸ்குமார் உறுதிமொழியினை எடுத்துரைத்தார், இதில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட காவல்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் காவல்துறை துணை ஆய்வாளர் பிபின் செல்வ பிரிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment