வருகிற சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் - பஞ்சாயத்து தலைவர்கள் முடிவு.
தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.06, சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிலை, வரிப்பிலாங்குளம், நெடுங்குளம், வழியாக பேருந்து வசதி இயக்கி விட வேண்டுமென அப்பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே இந்த போராட்டம் குறித்து வைரலாகும் போஸ்டர். மேலும் இதனை கண்டித்து வரும் 2024 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொம்பன்குளம், நெடுங்குளம், கோமாநேரி, அமுதுண்ணாக்குடி, புதுக்குளம் ஆகிய பஞ்சாயத்து தலைவர்கள் வரிப்பிலான்குளம் ஆரோக்கியமாதா கெபி அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment