ஆகஸ்ட் 28, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் திருச்செந்தூர் வட்டார அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவு காலிறுதிப் போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி அணி வீரர்கள் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணி வீரர்களை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும், அரை இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் முகைதீன் மேல்நிலைப்பள்ளி அணி வீரர்களை 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும், இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் எல்கே மேல்நிலைப்பள்ளி அணி வீரர்களை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, முதலிடம் பிடித்துள்ளனர்.
இறுதிப் போட்டியில், மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் இர்வின் மற்றும் யுகன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். வட்டார அளவிலான கால்பந்து போட்டியில்வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி அணி வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த கால்பந்து பயிற்சியாளர்கள் நசரேயன், ராபர்ட்சன் சாலமோன், பொன்ராஜ், மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களான பிரைட்டன் ஜோயல், ப்ரூமல், சேவியர், இஸ்மாயில், டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலிடம் பிடித்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
MT. அந்தோணி ராஜா - தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment