உடன்குடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

உடன்குடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம்.


ஆகஸ்ட்.29, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அவ்வப்போது வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பர்மிட் இல்லாமல் இயக்குவது, தகுதி சான்று இல்லாமல் இயக்குவது, போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  


அதன்படி இன்று உடன்குடி பகுதியில் திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கை ஈடுபட்டனர். இதில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், மினி லாரிகள் ,கார்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எப்சி இல்லாமல் இயக்குவது, தகுதி சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவது, சரக்கு வாகனங்களை ஆட்களை ஏற்றி செல்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறிய சில வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து இது போல் வாகன தணிக்கை நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad