ஓய்வூதியர் சங்க 33 வது ஆண்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

ஓய்வூதியர் சங்க 33 வது ஆண்டு விழா.

ஸ்ரீவைகுண்டம். ஆகஸ்ட் 29. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க 33 வது ஆண்டு விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் யாதவர் திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் அரசு ஓய்வூதியர் சங்க கிளையின் 33 வது ஆண்டு விழா நடந்தது.   

கிளைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமை  தாங்கினார்.  துணைச் செயலாளர் குருசாமி வரவேற்புரை ஆற்றினார். 10 மணிக்கு இறை வணக்கம். கிளையின் செயலாளர் மாடசாமி சொர்ணம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார். பொருளாளர் சீனிப்பாண்டியன் சென்ற ஆண்டு வரவு செலவு மற்றும் சென்ற ஆண்டு விழா  வரவு செலவு  வாசித்தார்.  மாநில சங்கத்தின் மண்டல துணை தலைவர் தங்கவேல் மற்றும் முன்னாள் மண்டல துணைத் தலைவர் அய்யலுசாமி  ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓய்வூதியர் களுக்கு தேவையான விபரங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். 

தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாண்டி. ஸ்ரீவைகுண்டம் சார்நிலை கருவூல அலுவலர் சிவனு பாண்டியன். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ். திருச்செந்தூர் கிளைத் தலைவர் கண்ணன். நாசரேத் கிளைத் செயலாளர் கொம்பையா. ஆகியோர் உரையாற்றினார்கள்.  

75 ஆண்டு நிறைவு பெற்ற 70 ஓய்வூதியர்களுக்கு சிறப்பு சால்வை அணிவிக்கப்பட்டது.  உறுப்பினர் கள் அனைவருக்கும் டிராவல் பை வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவசமாக ஓய்வூதியர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் துணைத் தலைவர்கள் ஈஸ்வர மூர்த்தி, மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் தாமஸ், பரமசிவன், பார்வதிநாதன், துரைராஜ், சீதாராமன், செல்வராஜ், வெங்கட்ராமன், நாராயணன், ஞானராஜ், கரையாளன் ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். சுந்தர பாண்டியன் நன்றி உரையாற்றினார். தேசிய கீதத்துடன் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad