ஏரல் வட்டார பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 August 2024

ஏரல் வட்டார பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தலின்படி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா பகுதியில் இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் அரசு அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்,நட்டாத்தி ஊராட்சி நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நட்டாத்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். 

பின்னர் ஏரல் வட்டம், பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு தெருவில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த வீடு தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மதியம் ஏரல் ஆற்றுப்பாலம், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்து தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குரங்கணி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குரங்கணி புறவழிச்சாலையின் தரம் குறித்து 
ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து மாவடிப்பண்னை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார். 

தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார மையம் மற்றும் ஆய்வக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உள்நோயாளி பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி கண்மாயில் புதிதாக நிரந்தர மதகுகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்து வெள்ளமடம் சென்று அக்கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் பயிற் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. 
இன்று 28.8.24 மாலை ஏரல் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து துறை சார்நத அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்திற்கு பின் குரும்பூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் நாலுமாவடி சென்ற ஆட்சியர் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி பணிக்கநாடார்குடியிருப்பை பார்வையிட்டு அங்கு தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் இரவு உணவினை ஆய்வு செய்து மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.

மேற்படி கள ஆய்வுகளின் போது மாவட்ட ஆட்சியர் உடன் கூடுதல் ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad