ஆகஸ்ட் 15.நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன்
மேல்நிலைப்பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தினவிழா செய்தியை வழங்கினார்.
நம் முன்னோர் சுதந்திரத்திற்காக செய்த தியாகத்தையும், அதை நாம் எப்படி பேணிகாக்க வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் 78வது சுதந்திரதின சிறப்பை பற்றி எடுத்துரைத்தார்.
பள்ளி மாணவர்கள் மாறுவேட போட்டியிட்டு வந்தனர். இறுதியில் பள்ளி உதவிமுதல்வர் மாரிதங்கம் நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
தேசிய கீதம் முழங்க சுதந்திர தினவிழா இனிதே நிறைவடைந்தது. பிறகு பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment