ஒட்டப்பிடாரத்தில் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

ஒட்டப்பிடாரத்தில் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார். 

அதனை தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றினார். விழாவில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ரமேஷ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பெனட் ஆசிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad