நாசரேத்தில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

நாசரேத்தில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்.

சமாரியன் ஃபிட்னஸ் ஜிம், நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பின் சார்பில் சுதந்திர தின மாராத்தான் ஓட்டம், நான்காவது ஆண்டாக நாசரேத் சீரணி கலை அரங்கத்தில் இருந்து, நாசரேத் கலை கல்லூரி வரை சென்று திரும்பும் வகையில் நடைபெற்றது.

இந்த போட்டியை சாத்தான்குளம் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் கென்னடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



நாசரேத் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும், சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த மாராத்தான் ஓட்டத்தில் பங்கு பெற்றனர்.

முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தனர். மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் வெற்றி சான்றிதழும் காலை சிற்றுண்டியும் வழங்கினர்.

இந்த போட்டிகான ஏற்பாடுகளை நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பின் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad