சுதந்திர தின விழா 2024, ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜோ. ஜெயக்குமார் ரூபன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின உரையாற்றினார்.
கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வழக்கறிஞர் ரகுராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சுதந்திர தின விழாவில் கல்லூரி மாணவிகள் மதுமிதா, அட்சயலட்சுமி, சுவேதா மற்றும் நாலந்தா ஆகியோர் சுதந்திரத்தின் மாண்பு குறித்து உரையாற்றினார்கள். கல்லூரியில் புதிதாக துவங்கியிருக்கும் ஏஐடிஎஸ் ஆய்வகம் மற்றும் எம்.இ. ஆய்வகம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முதல்வர், நிர்வாக அதிகாரி உடற் கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment