அகப்பைகுளம் TNDTA துவக்கப்பள்ளியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாளாளர் அருள்திரு பாஸ்கரன் ஜெபித்து தேசியகொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பழைய மாணவர் சங்கம் தலைவர் பொன்ராஜ் ஜெபித்து ஆரம்பித்து வைத்தார். தலைமைஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார். பழைய மாணவர் சங்கம் செல்வின், வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் திறமைகளையும் தேசபற்றையும் வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கம் தலைவர் பொன்ராஜ் தாளாளர் அருள்திரு பாஸ்கரன் சிறப்புரை வழங்கினார்கள். ஆசிரியை சலோமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். அகப்பைகுளம் TNDTA துவக்கப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆசிரியை ரோஸ்மேரி நன்றியுரை வழங்கினார்.
சுதந்திரதின நிகழ்வில் அனைத்து பெற்றோர்களும் பங்குபெற்று சிறப்பித்தனர். பங்குபெற்ற அனைவருக்கும் ஐக்கிய விருந்தும் நடைபெற்றது.
78 வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை சிறப்பாக பள்ளி ஆசிரியர்கள் பழைய மாணவர் சங்கத்தினர்கள் செய்திருந்தனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment