தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி அவரின் உருவப்படத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் சித்திரை ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழரசம் சங்கர், ஒன்றிய துணை செயலாளர் பொன்பாண்டி, உடன்குடி ஒன்றிய தலைவர் உத்திரம், பேரூர் செயலாளர் காதர் பாய், நகர அவை தலைவர் உலகநாதன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மனப்பாடு பிரைநத், பொதுக்குழு உறுப்பினர் மாயாண்டி, மோசஸ் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பேச்சியம்மாள், மாவட்ட ஐடி வின் துணைச் செயலாளர் ஸ்ரீகாந்த் ,மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், சண்முக வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உடன்குடி ஒன்றிய தேமுதிக செயலாளர் பழரசம் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment