நாசரேத்தில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

நாசரேத்தில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.


நாசரேத்தில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.


நாசரேத், ஆகஸ்ட்:07
நாசரேத் பேரூர் தி.மு.க கழக சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலத்தப்பட்டது. நாசரேத் கே.வி.கே. சாமி சிலை, நாசரேத் சந்தி மற்றும் நகர கழக அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் கருத்தையா, துணைச் செயலாளர் ஜேம்ஸ், நகர பொருளாளர் சுடலைமுத்து முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன், ஒன்றிய பிரதிநிதிகள் ஞானராஜ், மாணிக்கராஜ், வார்டு செயலாளர்கள் உடையார், மாற்கு, சரவணன், மனோகரன், சிலாக்கியமணி, ஜெபகிருபை, இளங்கோ, தேவதாஸ், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார், வார்டு பிரதிநிதிகள் சேகர், கிதியோன், விண்சுவா, திருமணி, சதா, ராபின், மனோகரன், எமர்சன், பரந்தாமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம்ஸஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் - Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad