ஆலந்தலை இயேசுவின் திரு இருதய ஆண்டவர் பெருவிழா .. 350 வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி......ஆயர் அந்தோணி சாமி நற்செய்தி வழங்கினார்.....
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியில் மாதம்தோறும் முதல் வெள்ளிக்கிழமை யூபிலி விழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் வெள்ளிக்கிழமையான இன்று பேராலயத்தில் திரு இருதய ஆண்டவர் பெருவிழா 350 வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டார். அவருக்கு திருக்குடும்பம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் யூபிலி திருக்கொடியுடன் வரவேற்பளித்தனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் அந்தோணிசாமி நற்செய்தி வழங்கினார். நிகழ்ச்சியில் அருட்தந்தை தோமினிக் மற்றும் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர் மற்றும் உதவி பங்கு தந்தை ஜோதிமணி,பக்த சபைகள்,ஆலந்தலை இறைமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment