கோவில்பட்டியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 3 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

கோவில்பட்டியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 3 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு பூமிதேவி - நீலாதேவி சமேத அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ராஜீவ் நகர் இ.பி. காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வேலம்மாள் என்பவரிடம் 3 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுபோல் எட்டயபுரம் வளைவு ரோடு சுப்பிரமணியன் செட்டியார் காம்பவுண்டைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி வேலம்மாளிடம் (71) 4 பவுன் தங்கச் சங்கிலி, அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ஆதிலட்சுமி(54) அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிசென்றுவிட்டனராம். இதுகுறித்து, அவர்கள் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad