சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்டத்திற்கான விருது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்டத்திற்கான விருது.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்டத்திற்கான விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. 

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் டீன் பேராசிரியர் டாக்டர் .செண்பக விநாயகமூர்த்தி அவர்கள் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் அவர்களுக்கு வாழ்த்தி விருது வழங்கினார். 

 இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ரீஜனல் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் .ஜெயந்தி, அண்ணா பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் மதுமதி டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி தாளாளர் ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் மற்றும் நாட்டு நலப்பணி அலுவலர் டென்னிசன் கலந்து கொண்டனர்

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad