தூத்துக்குடி, ஜூலை.26, உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலய 442 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் இன்று காலை சிறப்பு திருப்பலி முடிந்து, கொடி அர்சிப்புடன் ஆலயத்தின் முன்பாக உள்ள கொடி மரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஏற்றபட்டது.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment