தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பகுதியில் ஐந்து மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மே.19, விளாத்திகுளம் அருகே உள்ள கடலாக்குடி பகுதியில் நேற்று மே.18 காலை முதல் இன்று மே.19 காலை வரை உள்ள நிலவரப்படி மாவட்டத்தில் மிக குறைந்த அளவான ஐந்து மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதே சமயத்தில் கயத்தாறு அருகில் உள்ள கடம்பூர் பகுதியில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மலை இன்னும் சில நாள் நீடிக்கும் எனவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment